தடுப்பூசி போட்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா வரலாம் – பிரான்ஸ் அரசு!

Published by
Rebekal
  • தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுற்றுலாவிற்காக பிரான்ஸ் நாட்டிற்குள் வரலாம் என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
  • இருப்பினும், இந்தியா, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதால், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என தளர்வுகளை சில நாடுகள் கொடுக்கிறது.

அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் சுற்றுலாவிற்கு வரலாம் என கூறப்பட்டது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் கூறும் பொழுது, ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிற்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலாவிற்காக வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலா பயணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் வருவதற்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பிற நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரலாம் எனவும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கு குரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

29 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

5 hours ago