2021-ம் ஆண்டு ஜூன் வரை தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு.!

Published by
murugan

இந்தாண்டு ஜூன் வரை கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வருவதற்கான வாய்ப்புகள் கம்மி என உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், ரஷ்யா தனது கொரோனா  தடுப்பூசியை இரண்டு மாதங்களுக்குள் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது என்று கூறினார். இந்த மருந்திற்கு பல நாடுகளின் விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மறுபுறம், அமெரிக்க அதிகாரிகளும் ஃபைசர் மருந்து நிறுவனமும் அக்டோபர் மாதத்திற்குள் தங்கள் தடுப்பூசி சென்றடையவுள்ளதாக என அவர்கள் கூறினர்கள்.

ஆனால், அடுத்தாண்டு (2021) நடுப்பகுதி வரை உலகளவில் பரவி உள்ள கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்பிக்கை இல்லை எனவும், தற்போது ஆராய்ச்சியில் உள்ள தடுப்பு மருந்துகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு எதிர்பார்க்கும் அளவிற்கு  50% கூட பூர்த்தி செய்யவில்லை என கூறினார்.

மேலும், ஏனெனில் உலகளவில் தயாரிக்கப்படும் அனைத்து தடுப்பூசிகளின் மூன்றாம் கட்ட சோதனைக்கு நிறைய நேரம் எடுக்கும். இந்த சோதனைகள் மூலம் மட்டுமே கொரோனா தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நீங்கள் அறிய முடியும் ஹாரிஸ் கூறினார்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதுடன் பல நாடுகளில் பொருளாதரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க  பல நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில், ரஷ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக கூறினாலும் அதன் மீதான நம்பகத்தன்மை குறித்த கேள்வி நிருபுணர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

10 minutes ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

39 minutes ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

4 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

5 hours ago