சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2006ல் அறிமுக இயக்குனரான சுராஜ் இயக்கத்தில் வடிவேலு மற்றும் இயக்குநர் சுந்தர் சி காம்போவில் வெளியான திரைப்படம் ‘தலைநகரம்’. இதில் வடிவேலுவின் நாய் சேகர் என்ற கதாபாத்திரம் மற்றும் கெட்டப் நம்மை இன்றளவும் சிரிக்க வைக்கிறது. இதில் ஜோதிர்மயி, பிரகாஷ்ராஜ், டெல்லி கணேஷ், போஸ் வெங்கட் என பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
தற்போது ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துள்ளதாகவும், அதற்கு ‘நகரம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தினை சுந்தர் சி கதாநாயகனாக நடித்த ‘இரட்டு’ என்ற படத்தின் இயக்குனரான V. Z. துரை இயக்குவதாக கூறப்படுகிறது. மீண்டும் நாய் சேகராக வடிவேலு மற்றும் சுந்தர். சி நடிக்கும் இந்தப் படத்தினை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…