உலகநாயகன் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை பாராட்டும் விதமாக கடந்த ஞாயிற்று கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டுவிழா நடைபெற்றது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்ட வடிவேலு, கமல்ஹாசனுடனான தனது நெகிழ்ச்சிகரமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறும்போது, ‘ வடிவேலு , கமலுடன் சிங்காரவேலன் படத்தில் நடித்து வந்துள்ளார். அப்போது வடிவேலுவின் நடிப்பை பார்த்து கமல் அழைத்து, தான் அடுத்து சொந்த படம் ( தேவர் மகன் ) எடுக்கிறேன். அதனால் நாளை காலை ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார். என கூறியுள்ளார். உடனே வடிவேலு, மறுநாள் வேறு யாரும் வந்துவிடக்கூடாது என முந்தின நாள் இரவே ராஜ்கமல் அலுவலகம் சென்று மேலாளரை பார்த்துவிட்டார். அங்குள்ள மேலாளர் கமலை தொடர்புகொண்டு பின்னர், தேவர் மகன் படத்தில் நடிப்பதற்காக 5000 ருபாய் செக் கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்த நிகழ்வை அடுத்து, கமல், வடிவேலுவிடம், உன்னை நான் விடிந்த பின் காலையில் தானே பார்க்க சொன்னேன் . நீ எதற்க்கு விடிவதற்குள் சென்று பாரத்தாய் என கேட்டுள்ளார். அதற்க்கு வடிவேலு, எனக்கு நேற்று நீங்கள் நடிக்க அழைத்ததும் விடிந்து விட்டது அதனால் தான் நேற்று இரவே ராஜ்கமல் நிறுவனம் சென்றுவிட்டேன் என கமலிடம் வடிவேலு நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை மேடையில் கூறி உணர்ச்சிவசப்பட்டார் நடிகர் வடிவேலு. மேலும் அடுத்து கமலின் தலைவன் இருக்கிறான் படத்திலும் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…
சென்னை : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 14) பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…