2000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்.!

Published by
Ragi

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பு வரலட்சுமி சரத்குமார் தனது சேவ் சக்தி அமைப்பின் மூலம் அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பிரபல நடிகையான  வரலட்சுமி, தனது சேவ் சக்தி பவுண்டேஷன் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வரலட்சுமியின் தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்கள் இணைந்து, தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது சென்னையிலிருந்து சொந்த ஊரான மேற்கு வங்காளத்திற்கு செல்லும் 2000புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்  ஊருக்கு செல்லும் வரை தேவையான உணவு மற்றும் மருத்துவ பொருட்களையும், தண்ணீர், முககவசம் ஆகியவற்றையும் வரலட்சுமி சரத்குமார் வழங்கி உதவியுள்ளார். இந்த பொருட்களை வரலட்சுமியுடன் அவரது  தாயான சாயா தேவி மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுடன் இணைந்து துரிதமாக செயல்பட்டு பொருட்களை வழங்கியுள்ளனர். இவற்றை செய்ய உதவியாக இருந்த சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, திரு. கவுதம் சந்தர் மற்றும் சேவ் சக்தி உறுப்பினர்களுக்கு தனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துள்ளார். ஏற்கனவே சேவ் சக்தி அமைப்பின் மூலம் பசியால் வாடும் வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

7 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

8 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago