தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரின் 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்ய கோரி வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித்தின் 50-வது படமாக வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் மங்காத்தா.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் அர்ஜூன்,திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.அதிலும் தல அஜித் இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தி பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.அதன் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் மங்காத்தா 2 எப்போது என்று கேட்டு வருகின்றனர்.
இப்படியிருக்க தல அஜித் தற்போது நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்காக ஒன்றரை வருட காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் தல அஜித்தின் 50-வது பிறந்தநாள் தினமான மே 1-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தல அஜித்தின் 50-வது பிறந்தநாளில் அவரது 50-வது படமான மங்காத்தா படத்தினை ரீ ரிலீஸ் செய்யுமாறு இயக்குனர் வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார் .
அவர் பகிர்ந்த பதிவில்,தயா அழகிரி சார் வர மே 1-ம் தேதி தல அஜித்தின் 50-வது பிறந்தநாள்.எனவே நம்ம தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தினை உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் தேதி ரீ ரீலீஸ் செய்தால் ரசிகர்களான நாங்கள் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருப்போம் , பார்த்து செய்யுங்க என்று குறிப்பிட்டுள்ளார்.சமீபத்தில் தான் தல அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…