வியன்னாவில் பயங்கரவாதத் தாக்குதல்.! 5 பேர் உயிரிழப்பு.!

Published by
Ragi

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தேவாலயத்தை சுற்றி 6 இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடைப்பெற்றதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரியாவின் தலைநகரான மத்திய வியன்னாவில் தேவலாயத்தை சுற்றி 6 இடங்களில் சில பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வியன்னாவின் 6 இடங்களில் ஆயுதம் ஏந்திய சிலர் தான் தாக்குதல் மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலை தொடர்ந்து ஆஸ்திரியா உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் பொது போக்குவரத்தை தவிர்க்குமாறும், நகரத்தின் மையத்தில் இருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்தார். மேலும் நகர எல்லையில் சோதனை வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், செவ்வாயன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாம் என்றும் கார்ல் நெஹம்மர் கூறியிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், வியன்னாவில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலை கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஆஸ்திரியாவுடன் நிற்கிறது என்றும், எனது எண்ணங்கள் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடமும், அவரது குடும்பத்தினரிடமும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Deeply shocked and saddened by the dastardly terror attacks in Vienna. India stands with Austria during this tragic time. My thoughts are with the victims and their families.

— Narendra Modi (@narendramodi) November 3, 2020

Recent Posts

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

38 minutes ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

1 hour ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

2 hours ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

18 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

19 hours ago