இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என அறிவித்திருந்தார். மேலும், அரசின் நிபந்தனைக்கு உட்படும் பட்சத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப சிக்கல் நிலவிய நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல இடங்களில் பிகில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் சிறப்பு காட்சிகள் நள்ளிரவில் வெளியாவில்லை. இதனையடுத்து, அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள், பொலிஸாரின் தடுப்புகளையும், சிசிடிவி கேமராக்களை உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…