மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக ஆர்.எஸ்.விமல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில், ‘என்னு நிண்டே மொய்தீன்’ எனும் படத்தை இயக்கிய பிரபலமான ஆர்.எஸ்.விமல் கடந்த 2018-ம் ஆண்டு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார்.சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கும் ‘மஹாவீர் கர்ணா’ என்று பெயரிடப்பட்ட அந்த படத்தில் விக்ரம் மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக உள்ளதாக கூறப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.அதன் பின் விக்ரம் கோப்ரா , பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்க சென்றதால் மஹாவீர் கர்ணா கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது அந்த திரைப்படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது மஹாவீர் கர்ணா படத்தினை தற்போது ‘சூர்யபுத்ரா மஹாவீர் கர்ணா’ என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உருவாகவுள்ள இந்த படத்தினை ஆர்.எஸ்.விமல் இயக்க குமார் விஷ்வாஸ் என்பவர் வசனம் , திரைக்கதை எழுத உள்ளதாக அறிவித்துள்ளது.அதற்கான வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது .மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதிலிருந்து இந்த பிரமாண்ட படத்திலிருந்து விக்ரம் விலகி உள்ளது உறுதியாகிறது.
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…
லீட்ஸ் : இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 21-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், இந்திய…
சென்னை : ஆங்கிலம் பேசுபவர் வெட்கபட வேண்டும் என்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…