3.6 கோடி இணைப்புகளை இழந்த வோடபோன் நிறுவனம்.!

Published by
murugan
  • தொலைபேசி இணைப்புகள் பற்றி  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

இந்தியாவில் 2019 நவம்பர் நிலவரப்படி தொலைபேசி இணைப்புகள் (செல்போன் ,லேண்டுலைன் ஆகிய இரண்டும் அடக்கும்) மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக உள்ளது.  இந்த எண்ணிக்கை முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது.

தொலைபேசி இணைப்புகள் பற்றி  டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 118.38 கோடியாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு மாதமும் ஏற்ற ,இறக்கத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 117.58 கோடியாக குறைந்தது. முந்தைய மாதத்துடன்ஒப்பிடும்போது 2.40 சதவீதம் குறைந்து உள்ளது.

நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் அக்டோபர் மாதத்தில் 68.17 கோடியாக இருந்த இணைப்புகள் நவம்பர் மாதத்தில் 66.60 கோடியாக குறைந்தது. கிராமப்புறங்களில் 52.32 கோடியாக இருந்த இணைப்புகள் 50.99 கோடியாக குறைந்தது. இதனையடுத்து செல்போன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 115.44 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நவம்பர் மாதத்தில் ஜியோ 56 லட்சம் புதிய இணைப்புகளையும் ,  பி.எஸ்.என்.எல். 3.41 லட்சம் இணைப்புகளையும் , பாரதி ஏர்டெல் நிறுவனம் 16.5 லட்சம் இணைப்புகளையும்  வழங்கி உள்ளது.ஆனால் அதே நேரத்தில் வோடாபோன் நிறுவனம் 3.64 கோடி இணைப்புகளை இழந்துள்ளது.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

7 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago