தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
இந்த நிலையில், தமிழில் மட்டுமில்லாமல் அணைத்து மொழிகளிலும் விஜய்க்கு ரசிகர்களுக்கு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதனால் விஜய்யை வைத்து படம் இயக்க அணைத்து மொழி இயக்குனர்களும் தயாராகத்தான் உள்ளனர்.
அந்த வகையில், தமிழில் ‘நேரம்’ படத்தையும், மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தையும் இயக்கி அல்போன்ஸ் புத்திரன் விஜய்யை வைத்து படம் இயக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அல்போன்ஸ் புத்திரன் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துகொண்டிருந்தார் . அப்போது ரசிகர் ஒருவர் விஜய்யின் படத்தை எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் “பிரேமம் படம் வெளியான போது முதல் பாராட்டே விஜய் சாரிடம் இருந்துதான் வந்தது. அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒருமுறை விஜய்யை சந்தித்தேன். நிச்சயம் ஒருநாள் என்னை படம் இயக்க அழைப்பார் என்று நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…