கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாரா ஜெனிலியா.?

Published by
Ragi

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா . ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனையடுத்து இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும், தளபதி விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இவருடைய நடிப்பில் களங்கமில்லாத குழந்தைதனம் மற்றும் குறும்புத்தனத்தால் அதிக ரசிகர்களை பெற்றார். அதன் பின்னர், 2012ல் பிரபல பாலிவுட் நடிகரான ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் கொண்டார். அதனையடுத்து தனது இரண்டு குழந்தைகளை பார்த்து கொண்டு செட்டிலாகி விட்டார் .

இந்த நிலையில் தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கடந்த 3 வாரத்திற்கு முன்பு தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி, அதனையடுத்து 21 நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தற்போது கடவுளின் அருளால் கொரோனா தொற்றுக்கான ரிசல்ட் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போர் தனக்கு மிகவும் எளிதாக இருந்ததாகவும், அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த 21 நாட்கள் தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், டிஜிட்டல் தளம் தான் தனது தனிமையை மாற்றியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் கொரோனாவிலிருந்து மீண்டு மீண்டும் தனது குடும்பத்தினருடனும், அன்புக்குரியவர்களுடனும் இணைந்ததில் மகிழ்ச்சி என்றும், தனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும், சத்தான உணவை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

9 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

10 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

10 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

11 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

11 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

12 hours ago