சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? உடனே இதை படியுங்கள்…

Published by
மணிகண்டன்

தண்ணீர் என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அதனை எப்போது பருக வேண்டும் ?எப்போது பருக கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. அதனை கடைப்பிடித்தால் மட்டுமே தண்ணீர் நமது உடலுக்கு உகந்தது. தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் இல்லாமல் சாப்பிட முடியாது. காரணம் இடையிடையே தண்ணீர் அவ்வபோது குடித்து கொள்வார்கள். ஆனால், அவ்வாறு தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் இரப்பையில் தண்ணீர் சென்று உணவை செரிமானம் செய்வதற்காக உண்டாகும் அமிலங்கள் தங்கள் தன்மையை இழந்து விடுகின்றன. அதாவது அந்த அமிலங்கள் நமது உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும் திறன் கொண்டது. தண்ணீர் குடிப்பதால் அந்த சக்தியை அமிலங்கள் இழந்து விடுகின்றன. இதனால் நமது இரப்பை உணவு ஜீரணமாவதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது
உணவை நாம் உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் நமது உமிழ் நீர் சுரக்கும் அளவும் குறைகிறது. உணவு செரிமானத்திற்கு உணவுடன் உமிழ்நீர் மிகவும் முக்கியமானது. உமிழ்நீர்  சரியான அளவில் நம் உணவில் கலக்காமல் இருந்தால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகிறது.
உணவு சாப்பிடுகையில் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமான கோளாறு ஏற்பட்டு அதனால் நெஞ்சு எரிவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
மேலும், உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பு அளவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க நமது உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பின் அளவு அதிகரிக்கும் போது தான் நமக்கு சாப்பிடும் போது தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் இதனால் நமது இரைப்பையின்  செரிமான நேரம் குறைக்கப்படும் இது நமது உடலுக்கு மிக நல்லது.

Published by
மணிகண்டன்
Tags: #Waterhealth

Recent Posts

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

13 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

48 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago