ஒரு பெண் தன் கணவரிடம் சொல்ல மறுக்கும் சிறந்த ரகசியங்கள் …!

Published by
Edison

ஒரு பெண் தன் கணவரிடம் ஒருபோதும் சொல்ல மறுக்கும் ரகசியங்கள் பற்றி காண்போம்.

திருமண வாழ்க்கையானது பலருக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. கணவன்,மனைவி இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும்,ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளாத பல ரகசியங்கள் உள்ளன.

குறிப்பாக,பெண்கள் தங்கள் கணவருடன் பகிர்ந்து கொள்ளாத ரகசியங்களை பற்றி அறிய டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம், திருமணமான ஏழு பெண்களிடம் தங்கள் கணவரிடம் ஒருபோதும் வெளிப்படுத்தாத விஷயங்களைப் பற்றி கேட்டது.அப்போது அவர்கள் கூறியதாவது:

முன்னாள் காதலன்:

ஒரு பெண் கூறுகையில்:”என் கணவனை நான் நேசிக்கிறேன்,மதிக்கிறேன் என்றாலும் கூட,சில நேரங்களில் கணவரை முன்னாள் காதலருடன் ஒப்பிட்டு பார்க்கிறேன்.அது ஆரோக்கியமானதல்ல என்றாலும்,யாரும் சரியானவர் அல்ல என்று தான் உணர்கிறேன்.எனினும்,திருமணமாகி மூன்று மாதங்களான பின்னும்,கடந்த காலத்தை மறந்து நிம்மதியாக வாழ முயற்சிக்கிறேன்.

கடந்த காலம்:

மற்றொரு பெண் கூறுகையில்,”கடந்த காலங்களில் நான் எத்தனை பேரை காதலித்தேன் என்று என்னிடம் கணவர் கேட்டார். திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன,நான் கடந்த காலத்தைப் பற்றி பேசினால்,என் கணவர் பாதுகாப்பற்றவராக உணர்கிறார்.

வேலை:

“குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கும்,வீட்டு வேலைகள் செய்வதற்காக தனது வேலையைக் கைவிட்டு விட்டேன்.வீட்டு வேலைகளில் கணவர் உதவி செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்றாலும், கணவரிடமிருந்து சில பாராட்டுக்களை எதிர்பார்க்கிறேன்”, என்று மற்றொரு பெண் தெரிவித்தார்.

கணவரின் தாய்:

TOI உடன் பேசிய மற்றொரு பெண் கூறுகையில்:”நானும் எனது மாமியாரும் ஒரு நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை.ஏனெனில்,நானும் என் மாமியாரும் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபடும்போது,என் கணவர் எப்போதும் அவர் அம்மாவின் நியாயத்தை மட்டுமே பேசுவார்.இதனால், குடும்பத்தில் சில நேரங்களில் ஒரு அந்நியரைப் போல நான் உணருவதால் சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் அழுகிறேன்”,என்று கூறினார்.

தனது மாமியாரை நேசிப்பது போல நடிப்பது:

நான் எனது மாமியாருடன் ஒரு போதும் உண்மையாக பழகுவதில்லை, மாறாக அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வது போல் நடிகிறேன்.ஏனெனில், அவர் என்னை ஒருபோதும் தனது சொந்த மகளைப் போல நடத்தமாட்டார் என்பதனால்,என் பெற்றோருக்கு செய்வது போலவே அவர்களையும் நேசிக்கவும் பராமரிக்கவும் முடியாது”,என்று தெரிவித்தார்.

உடல் உறவு:

TOI உடன் பேசிய மற்றொரு பெண்,”எனது கணவருடனான உடல் உறவு அவரது மகிழ்ச்சியைப் பற்றியது மட்டுமல்ல,அதில் எனது மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது என்று சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன்.ஏனெனில்,எனது கணவர் குறைந்த நேரம் மட்டுமே உடலுறவில் ஈடுபடுகிறார்”,எனக் கூறினார்.

வதந்திகள்:

கடைசியாக பேசிய ஒரு பெண்,”எனது தனிப்பட்ட விசயங்களை பற்றி, என் நண்பரிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை.மேலும்,கணவருக்கு முன்னால் எனது உறவினர்களைப் பற்றியும் பேச விருப்பமில்லை.காரணம் எனது எல்லா ரகசியங்களையும் என் கணவர் அவரது அம்மாவிடம் சொல்கிறார். எனவே,மற்றவர்கள் கூறும் வதந்திகளை நம்பி யாரும் என்னை பற்றி தவறாக நினைப்பதை நான் விரும்பவில்லை”,என்று தெரிவித்தார்.

Published by
Edison

Recent Posts

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

15 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் எதற்காக எப்படி நடத்தப்பட்டது? இந்திய ராணுவம் விளக்கம்!

டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…

3 hours ago

உளவுத்துறை எச்சரிக்கை., மீண்டும் தாக்குதல்? விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…

4 hours ago

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

6 hours ago