கூகுள் டொமைனை வெறும் ரூ.207-க்கு வாங்கிய வெப் டிசைனர்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

Published by
லீனா

அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் 207 ரூபாய்க்கு வாங்கி உள்ளார்.

இன்றைய காலத்தில் கூகுள் தளம் அனைத்து பணியிடங்கள், தொழில் நிறுவனங்கள் மருத்துவத் துறை, கல்வித் துறை என எல்லா இடங்களிலும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில், அர்ஜெண்டினாவின் 30 வயதான வெப் டிசைனர் நிக்கோலஸ் குரோனா என்பவர் கூகுள் டொமைனை வெறும் ரூ.207 வாங்கி உள்ளார். அந்த டொமைனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிக்கோலாஸ் கூறுகையில் கூகுள் என்னை வாங்க அனுமதிக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு வலைதளத்தை வரவழைத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது கூகுள் தளம் டவுன் ஆனதை வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ் மூலம் அவர் தெரிந்து கொண்டுள்ளார். பின் அவர் தனது பிரவுசரில் www.google.com.ar-ஐ உள்ளிட்டேன். ஆனால் அந்த தளம் செயல்படவில்லை.

பின் ஏதோ நடக்கிறது என்று உணர்ந்தேன். நெட்வொர்க் தகவல் மையம் (NIC)  அர்ஜென்டினாவுக்கு செல்வதற்கு முடிவெடுத்தேன். அப்போது அர்ஜென்டினா கூகுள், டொமைனை வாங்க அனுமதி  அளித்தது. இருப்பினும் அது வேலை செய்யாது என்று அவர் நினைத்தேன். ஆனாலும் அதில் கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி முயற்சி செய்தேன், சற்று நேரத்தில் கொள்முதல் விலை பட்டியலுடன் ஒரு மின்னஞ்சல் வந்தது என தெரிவித்துள்ளார்.

அவர் டொமைன் பெயரை வெறும் £ 2 (ரூ. 207) க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அமெரிக்க நாட்டில் கூகுளின் அனைத்து தேடல்களும் நிக்கோலா குரோனா என்ற வலைத்தளத்திற்கு திருப்பி விடப்பட்டது. கூகுள் அர்ஜென்டினா கூகுள் தளம் டவுன் ஆவது குறித்து அறிந்தது. அதனடிப்படையில் சோதனை செய்ததில், நிகோலஸ் இந்த டொமைனை வாங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து கூகுள் சற்று நேரத்திலேயே கூகுள் டொமைனை நிக்கோலஸ் குரோனாவிடம் இருந்து மீட்டெடுத்தது.

இதுகுறித்து கூறுகையில் குறுகிய நேரத்துக்கு டொமைன் வேறு ஒருவரால் கையகப்படுத்தப்பட்டது. சற்று நேரத்தில் அதை மீட்டு எடுத்துள்ளோம். எங்களது  டொமைன் ஏன் விற்பனைக்கு வைக்கப்பட்டது என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…

18 minutes ago

பாலம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்வு.., பிரதமர் மோடி நிவரணம் அறிவிப்பு.!

குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…

1 hour ago

கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர், ஓட்டுநர் உட்பட 13 பேருக்கு சம்மன்.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…

2 hours ago

“மாணவர்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக் கூடாது” – மு.க.ஸ்டாலின் அறிவுரை!

திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…

2 hours ago

கடலூர் ரயில் விபத்து: செம்மங்குப்பத்தில் புதிய கேட் கீப்பர் நியமனம்.!

கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…

2 hours ago

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

3 hours ago