நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து விஜய்யை வருமானவரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் பிகில் பட தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புசெழியன் அவர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து மதமாற்ற கும்பல் பெரும் தொகையை வாங்கி, அதை சினிமாவில் முதலீடு செய்திருக்கின்றனர்.
இதில் நடிகர் விஜய், விஜய் ஆண்டனி, பிரபுசாலமன் சந்திரசேகர், விஜய் சேதுபதி போன்ற சினிமாக்காரர்கள் பலரும் ஈடுபட்டு நிறைய சம்பாத்தியம் அடைகின்றனர். அதன் பின்னணியில் தான் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர் என்று இணையத்தில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனை அடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேதுபதி தனது இணையப்பக்கத்தில் ‘போங்கடா போய் வேற வேலைய பாருங்கடா, என பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பி.ஸி. ஸ்ரீராம் கூறுகையில் நடிகர் விஜய் சேதுபதியின் கருத்தை வரவேற்கிறேன். நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி என விஜய் சேதுபதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…
சென்னை : புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன்…
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…