சமந்தாவின் ‘ஷகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு எப்போது.?

Published by
Ragi

சமந்தா அடுத்ததாக நடிக்கவுள்ள சரித்திர படமான ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா.தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் சமந்தா . அதனுடன் ‘ஷகுந்தலம்’ எனும் புராண படத்திலும் சமந்தா நடிக்கவுள்ளார்.

மகாபாரதத்தில் உள்ள சாகுந்தலம் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஷகுந்தலம்’ படத்தினை அனுஷாவின் ருத்ரமாதேவி படத்தினை இயக்கிய குணசேகர் இயக்குகிறார்.இதில் சகுந்தலை கேரக்டரில் நடிக்க முதலில் அனுஷ்காவிடம் தான் அணுகினாராம் . ஆனால் அவர் மறுக்கவே கடைசியாக சமந்தா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

அதன் பின் சமந்தாவிற்கு ஜோடியாக துஷ்யந்தன் கேரக்டரில் பிரபல மலையாள நடிகரான தேவ் மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இந்த நிலையில் தற்போது ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது நடிகை சமந்தா தற்போது நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு மார்ச் 20-ம் தேதி முதல் ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் பிரமாண்டமான செட் போடும் பணிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
Ragi

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

7 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

7 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

8 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

9 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

9 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

9 hours ago