இந்த வார நாமினேஷனில் சனம் , ஷிவானி,அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது
நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில்,நாமினேஷனில் சனம் , ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ளனர் . அதனையடுத்து மற்ற போட்டியாளர்களிடம் இந்த மூவரில் யார் தங்க வேண்டுமென்பது உங்கள் பரிந்துரை என்று கமல்ஹாசன் கேட்கிறார்.அதற்கு ரியோ , அர்ச்சனா,நிஷா ,ரம்யா ஆகியோர் சனம் அவர்களின் பெயரையும் , சோம் மற்றும் பாலாஜி ஆகியோர் ஷிவானி பெயரையும் ,ஆஜீத் அவர்கள் அனிதா பெயரையும் கூறுகின்றனர்.
மேலும் ஆரி அவர்கள் அனிதா வெளி செல்வார்கள் என்று நினைக்கிறேன் என்று கூற கமல் குறுக்கிட்டு யார் தங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க சனம் பெயரை கூறுகிறார்.மொத்தத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களும் பலரும் சனமின் பெயரை கூறியுள்ளனர் .ஆனால் விதி அவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது .
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…