சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி செய்கிறார் என நொந்து கொள்கின்றனர்.
ஒருவருக்கு வாழ்வில் தோல்வி ஏற்படவில்லை என்றால் அவர் கடவுளை நினைத்து கூட பார்க்க மாட்டார். அதனால் தான் வெற்றியும், தோல்வியும் மனிதனுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தோல்வி ஒருவர் பெற்று வந்தால் அது அவரது தவறில்லை. கண்டிப்பாக வெற்றி அவரை தேடி வரும். தோல்வி என்பது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அந்த தோல்வியின் மூலம் நீங்கள் கற்று கொள்ளாமல் இருந்தால் தான் அது உங்களுக்கு உண்மையான தோல்வி.
தோல்வியை தவிர்த்துவிடலாம். ஆனால், கெட்ட நேரத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று இப்போது பார்க்கலாம். நமக்கு நல்ல நேரம் கூடிவந்து வெற்றியை கொடுக்க நமது ஜாதகத்தில் ராகு சிறப்பாக அமைய வேண்டும். அந்த ராகு தெய்வத்தின் அருள் கிடைக்க சில பூஜைகள் செய்ய வேண்டும்.
ராகுவிற்கு மிகவும் உகந்த பொருள் உளுந்து அல்லது கோமேதக கல். கோமேதகம் கல் மிகவும் விலை உயர்ந்தது. அதனால் அதனை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் உளுந்து என்பது நம் அனைவராலும் வாங்க கூடிய பொருள். இந்த உளுந்தை வாங்கி கோவிலில் ராகு மூலமும் முன்பு வைத்தும் வழிபடலாம். அல்லது துர்க்கை அம்மன் முன்பாக வைத்து ஓம் துர்காயை நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
அப்படி கூறி முடித்து தங்களுக்கு தேவையானதை வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கு நல்ல நேரம் கூடி வரும். அதே போல அந்த உளுந்தை நாம் வீட்டிற்க்கு கொண்டு வரலாம். அல்லது கோவிலில் தானமாக கொடுத்துவந்தால் மிகவும் நல்லது. கோமேதக கல்லை வாங்க வசதி படைத்தவர்கள் அந்த கல்லை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் குங்கும பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்து அந்த குங்குமத்தை எடுத்து தினமும் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நமது கெட்ட நேரம் விலகி, நல்ல நிறம் நம்மை தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றியுடன் சுலபமாக முடியும்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…