சென்னை டி நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள தியாகராய நகரில் பெயருக்கு காரணமான சர்.பி.தியாகராய செட்டி நினைவு தினம் இன்று.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்துவந்த அய்யப்ப செட்டியார் மற்றும் வள்ளி அம்மாள் தம்பதியினருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகன் தான் வெள்ளுடை வேந்தர் பி தியாகராய செட்டி. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1876 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். இவரது மனைவி பெயர் சிந்தாமணி. இவருக்கு ஒரு மகன் மற்றும் 7 மகள்கள் உள்ளனர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவருமாகிய தியாகராயர் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் மிகப்பெரும் தொழில் அதிபராகவும் பெயர் பெற்றிருந்துள்ளார்.
இவர் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுப்பதற்காக டி.எம்.நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியை தொடங்கிய இவர் முதன்மறையாக 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராகவும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் இவர் முதல்வர் பொறுப்பு ஏற்காமல் கட்சித் தலைவராக மட்டுமே நீடித்துள்ளார். எனவே,நீதிக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் உள்ள சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் முதல்வராக இருந்த நிலையில் 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தியாகராயர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இவரது நினைவாக தான் சென்னையில் அந்நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிக்கு தியாகராயநகர் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தற்போது நாம் அழைக்கும் தி.நகர் இவரது பெயர் நினைவாகவே சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சர் பிட்டி தியாகராயர் அரங்கம் என்னும் பெயரிலும் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்று உள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…