தலிபான்கள் தலைவர் முல்லா அப்துல் கனி,ஆப்கானின் புதிய அதிபராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து,தலிபான்கள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் விரைவில் பணிக்கு திரும்புமாறும் அறிவுறுத்தினர்.இதற்கிடையில்,பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்தும்,விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி பயணம் செய்தும்,அப்போது விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே குடியிருப்பு பகுதியில் விழும் வீடியோக்கள் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
மேலும்,ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனை உறுதி செய்யும் விதமாக கத்தாரிலிருந்து ஆப்கானுக்கு,நேற்று அவர் வருகை புரிந்துள்ளார்.சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வருகை தந்திருக்கிறார்.ஏனெனில்,தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பரதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.
யார் இவர்?:
ஆப்கன் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்த முல்லா அப்துல் கனி பரதர். ஆப்கனில் சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர்.சோவியத் யூனியன் வெளியேற்றத்துக்குப் பிறகு, 1994 ஆம் ஆண்டு முகமத் ஒமருடன் இணைந்து தலிபான் இயக்கத்தை ஆரம்பித்தவர்.மேலும்,இவர் ஹெராட் மற்றும் நிம்ரூஸ் மாகாணங்களின் ஆளுநராக இருந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணம் இவரை முன்னாள் துணை ராணுவத் தளபதி மற்றும் காபூலின் மத்திய இராணுவப் படைத் தளபதி என்று பட்டியலிடுகிறது.அதே சமயம் இவர் தலிபானின் பாதுகாப்பு துணை அமைச்சர் என்று இன்டர்போல் கூறுகிறது.கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அமெரிக்க அரசுடனான அமைதி பேச்சு வார்த்தையில் இவர் முதன்மை பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…