அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் வில்லன் யார் தெரியுமா.! கசிந்த கதை.!

Published by
Ragi

அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது.

அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்பட வில்லை. அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளில் சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார்.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் கஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியை தழுவியதாக தயாரிப்பாளரான மதியழகன் பேட்டியில் குறிப்பிட்டார். மூன்று வித்தியாசமான லுக்கில் பாக்ஸராக நடிக்கும் அருண்விஜய்க்கு தற்போது வில்லனாக நடிப்பது யார் என்ற செய்தியை தயாரிப்பாளரே வெளிப்படுத்தியுள்ளார். ஆம், பாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் தான் அருண்விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறியுள்ளார். அருண்விஜய்க்கு மேனேஜராக நடித்துள்ளதாக வும், தனது பேச்சை கேட்காமல் அவர் முடிவெடுக்கும் பட்சத்தில் அவருக்கு தான் வில்லனாக மாறுவதாகவும் கதையை போட்டுடைத்துள்ளார். மேலும் மதியழகன் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5மணிக்கு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வில்லனாக நடிக்கும் தயாரிப்பாளர் மதியழகன் :

Published by
Ragi

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

7 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

7 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

7 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

8 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

8 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

9 hours ago