டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை உருவாகியுள்ளதாக who எச்சரிக்கை…!

Published by
லீனா

டெல்டா வகை கொரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் 4-வது அலை உருவாகியுள்ளதாக who எச்சரிக்கை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் ஆனது தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆக ஒவ்வொரு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து பல நாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில்  நான்காம் நிலை உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய  டெல்டா கொரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15 நாடுகளில் பரவியுள்ளது.

கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் டெல்டா வகை கொரோனா  அதிகரித்துள்ளது. இந்த வகை வைரஸால், பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும்  தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களாக தான் இருக்கின்றனர். எனவே இப்பகுதியில் நான்காவது கொரோனா அலை பரவி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் நோய்த்தொற்றுகள் 55 சதவிகிதம் மற்றும் இறப்புகள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வாரந்தோறும் 310,000 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும்,  3,500 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago