நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்து கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள கோவிலை பார்வையிட்ட பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது .
சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை கோவிலில் வைத்து எளிமையாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. இந்த நிலையில் இந்த காதல் ஜோடி தங்களது திருமணத்தை நடத்துவதற்காக பல கோயில்களில் ஏறி இறங்குவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு கோவிலுக்கு வருவதாகவும், அவற்றை பார்வையிட்ட பின்னர் அவரது திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது. நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நெற்றிக்கண், ரஜினியின் அண்ணாத்த மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரண்டு காதல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…