கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உலகின் முதல் மனிதரான வில்லியம் ஷேக்ஸ்பியர் காலமானார்..!

Published by
Edison

உலகிலேயே முதன்முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபரான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.

இங்கிலாந்தில் வசிக்கும் 81 வயதான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்,முதன்முதலில் கொரோனா தடுப்பூசி போட்ட உலகின் முதல் மனிதர் என்ற வரலாற்றை உருவாக்கியவர்.இதன்மூலம்,அவர் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் முதல் நபராகவும் ஆனார்.அதன் காரணமாகவே,கடந்த ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றார்.

இந்நிலையில்,வில்லியம் ஷேக்ஸ்பியர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார். மேலும்,அவர் இறந்த தகவலை ஆங்கில செய்தி ஊடகங்கள் தங்களது இதழில் வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து,இங்கிலாந்தில் உள்ள தொழிற்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்,மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியருக்கு,தனது இரங்கலை தெரிவிக்கும் வகையில் கூறியதாவது,”கட்சிக்கு பல வருடங்களாக வில்லியம் சேவை செய்தவர்.எனவே,அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறினார்.

மறைந்த வில்லியம் ஷேக்ஸ்பியர்,பிரபல விலையுயர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸில் பணிபுரிந்தார் மற்றும் பாரிஷ் கவுன்சிலராக இருந்து பணி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

10 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago