100 நாடுகளுக்கு 160 பில்லியன் டாலர் – உலக வங்கி அதிரடி அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவால் பாதித்த 100 நாடுகளுக்கு சுமார் ரூ.12 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உலக வங்கி அறிவித்துள்ளது.

உலக முழுவதும் கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி உள்ளது. இந்த கொடிய வைரசால் இதுவரை 50,90,157 பேர் பாதிக்கப்பட்டு, 3,29,739 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொது போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளது. இதனால் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. உலகளவில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக பல நாடுகள் வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.

இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பா வாஷிங்டனில் இருந்து தொலைபேசி வழியாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, கொரோனா மற்றும் ஊரடங்கால் உலகமெங்கும் 6 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிடும் என கூறியுள்ளார். இந்த பிரச்சினையில் உலக வங்கி விரைவாகவும் தீர்க்கமாகவும் நடவடிக்கை மேற்கொள்கிறது. வைரசால் பெரும்பாதிப்புக்கு ஆளாகியுள்ள 100 நாடுகளில் அவசர கால நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக வங்கி 160 பில்லியன் டாலர் (சுமார் ரூ.12 லட்சம் கோடி) நிதி உதவி வழங்கும் என்று தெரிவித்தார். இந்த 100 நாடுகள்தான் உலக மக்கள் தொகையில் 70 சதவீதத்தை தங்களிடம் கொண்டுள்ளன. மீதம் 39 நாடுகள் ஆப்பிரிக்காவில் உள்ளன.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், உலக நாடுகள் பொருளாதார வளர்ச்சிக்கு திரும்ப வேண்டும் என்றால் அதற்காக சுகாதார அவசர நிலையை சமாளிக்க வேண்டும் என்றும் ஏழைகளை பாதுகாக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தனியார் துறையை பராமரிக்க வேண்டும். பொருளாதார பின்னடைவை மீட்டெடுக்க வேண்டும். இதுதான் உலக வங்கியின் குறிக்கோள் என குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில்தான் உலக வங்கி 15 மாத காலத்தில் 160 பில்லியன் டாலரை வழங்க போகிறது என்றும் இது ஒரு மைல்கல்லாக இருக்கும் என கருதினார். சுகாதார, பொருளாதார, சமூக அதிர்வுகளுக்கு திறம்பட பதில் அளிக்கும் வகையில் இந்த திட்டங்கள் நாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை வாங்கவும் உதவும் என தெரிவித்துள்ளார். 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

8 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

8 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

8 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

10 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

10 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

11 hours ago