வரலாற்றில் இன்று(15.03.2020)… உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று…

Published by
Kaliraj

சர்வதேச நுகர்வோர் அமைப்பு  என்ற ஒரு அமைப்பு 1960 ஏப்ரல் மாதம் 1ஆம் நாள்  தொடங்கப்பட்டது. இதில் தற்போது  120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்  வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது. 1962ஆம் ஆண்டு  அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  15ஆம் நாள்  இந்த தினம் உருவாக்கப்பட்டது. விய்யாபாரி விற்கும் ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். சந்தையின் முக்கிய எஜமானர் நுகர்வோர் தான். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை. தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு  ஏற்ப சில பொருட்களின் தரம் இருப்பதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். 
பொருட்களை வாங்கும் போது

  • ஐஎஸ்ஐ                      – இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்
  • அக்மார்க்,                – வேளாண்பொருள்களுக்கான தரக்குறியீடு
  • எஃப்பிஓ                      – கனி உற்பத்தி ஆணையம்
  • எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,  – இந்திய்ய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம்

உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிப்பது பார்ப்பது அவசியம். மேலும் அதில்,

  • விலை,
  • உற்பத்தியாளர் முகவரி,
  • காலாவதி தேதி,
  • விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

இந்தியாவின் நிலை:

  • இந்தியாவில் ‘நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019’ கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதில்
  • புதிதாக நுகர்வோர் ஒழுங்குமுறை ஆணையம்,
  • தவறான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் போலி பொருட்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை,
  • புகார் செய்யும் முறையில் தாராளமயம்,
  • வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை,
  • புகார்களுக்கு விரைவில் தீர்வு, வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு பெறும் வசதி,
  • கலப்படத்துக்கு தண்டனை போன்ற பல அம்சங்கள் உள்ளன.

நுகர்வோரின் உரிமைகள்:

நுகர்வோர் உரிமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்  மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நிலையான நுகர்வோர்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்
களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

11 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

12 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago