கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ளும் உலக பெண் தலைவர்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

அலட்சியப்படுத்திய தலைவர்கள் மத்தியில் கொரோனாவை தைரியமாக எதிர்கொண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் பெண் தலைவர்கள்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு வல்லரசு நாடுகள் மிரண்டு இருப்பதை அனைவராலும் அறிய முடிகிறது. ஆனால் பெண்களை தலைவர்களாக கொண்ட நாடுகள் தைரியமான முடிவுகளால் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைத்துள்ளனர். இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை தொடக்கத்தில் வதந்தி என்று கூறினார். இதையடுத்து ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கையும் அலட்சியப்படுத்தினார். அதுபோன்று பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் கொரோனாவை அலட்சியமாகவே கருதினார். அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவதற்கு முன்பு வரை நோயாளிகளுக்கு கை கொடுப்பதை நிறுத்த முடியாது என்று கூறி வந்தார்.

இப்படி அறிவியலை அலட்சியப்படுத்திய தலைவர்களுக்கு மத்தியில் அதிரடி உத்தரவுகளால் அதனை மிகவும் சாதுரியமாக கையாண்டு வருகிறார்கள் உலகில் உள்ள பெண் தலைவர்கள். சீனாவின் கொரோனா வைரஸ் குறித்து தகவல் வந்த அடுத்த நாளிலே தைவான் வரும் விமானங்களுக்கு தடை விதித்தார் அந்நாட்டு பிரதமர் சாய் இங்-வென், தற்போது தைவான் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395 ஆக உள்ளது. தங்கள் நாட்டு தேவைக்குபோக ஐரோப்பிய நாடுகளுக்கு முகக்கவசங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது.

இதையடுத்து சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியுள்ள நியூசிலாந்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைய ஆரம்பத்திலேயே தடை விதித்தார் அந்நாட்டு பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், அவரது இந்த அதிரடி நடவடிக்கையே கொரோனா அதிகம் பரவாமல் இருக்க காரணமாக கூறப்படுகிறது. அங்கு 1,409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல் பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகளை பெண் தலைவர்களே ஆளுகிறார்கள். கொரோனாவின் தாக்கத்தை புரிந்துகொண்ட முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் எடுத்ததால் கொரோனா வைரஸை பெரும் அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் பதற்றமின்றி சரியான முடிவுகளை பெண் தலைவர்களே எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

14 minutes ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

1 hour ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

4 hours ago