தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம்வருபவர் யோகி பாபு இவர் திடீரென வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சினிமா உலகை சேர்ந்தவர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் யாருக்கும் யோகியின் திருமணம் குறித்து தெரியாது.ஏன் நீங்க எங்ககிட்ட இத சொல்லல என்று ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில் நடிகர் யோகி பாபு இத்திருமணம் குறித்து விளக்க அளித்ததுள்ளார்
அதில் எதிர்பாராத சில குடும்ப சூழல் காரணமாக நான் அவசர நிலையில் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.அதனால் தான் யாருக்கும் முறைப்படி அழைக்க மற்றும் உங்களுடைய வாழ்த்துக்களை பெற முடியாமனல் போனது என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது.
இது குறித்து அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை சற்று புரிந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத சில சந்தர்ப்பங்கள் அதனால் அந்த சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.என்ன முடிவு எடுப்பது என குழப்பமான நிலையில் தான் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் அமர்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம்.
இவ்வாறு கோபம் இருந்தாலும் என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து மற்றும் அனைத்து சமூகவலைதளங்களிலும் என் திருமண படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரின் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.மார்ச் மாதம் என்னுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது அதற்கு அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெறுவேன் விரைவில் நாம் சந்திப்போம் என்று உருக்கத்தோடு தெரிவித்தார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…