ஜிம்பாப்வேயில் விமானப்படை ஹெலிகாப்டர் பயிற்சி நேரத்தில் வயல்வெளியில் தரையிறங்கும் போது வீட்டின் மீது விழுந்ததில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவிலுள்ள ஜிம்பாப்வே எனுமிடத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று இரண்டு விமானிகள் மற்றும் ஒரு தொழில் நுட்ப வல்லுனருடன் பயிற்சி பணியில் இருந்துள்ளது. வயல்வெளியில் தரை இறங்கும் பொழுது திடீரென விமானம் நிலை தடுமாறி ஒரு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில் மூன்று ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். விமானப்படை அறிக்கையில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தலைநகர் ஹரேராவுக்கு கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விவசாய பகுதியான ஆர்க்டராசில் உள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்தது எதிர்பாராத நிகழ்வு என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்களை பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தக்கூடிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு உள்ளத டன் இந்த ஹெலிகாப்டர் மற்றும் போர் விமானங்கள் மிகவும் பழையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை காரணமாக புதிய விமானம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தான் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…