வைரல்

MSDhoni: அந்த சாக்லேட்டை குடுங்க..! ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய எம்.எஸ்.தோனி.!

Published by
செந்தில்குமார்

தனது விடுமுறையை கழிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.

இந்த போட்டியை தோனி நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடினார். அதன்படி, டிரம்ப் மற்றும் தோனி இருவரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.

அந்த வகையில், தற்பொழுது தோனி தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்து உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனியை பார்த்த ரசிகர் ஒருவர் தனது கையில் இருக்கும் மினியேச்சர் பேட்களில் ஆட்டோகிராப் கேட்கிறார். உடனே தோனி அந்த பேட்டில் ஆட்டோகிராப் போட்டு அவரிடம் கொடுக்கிறார்.

தோனி கையெழுத்திட்டு பேட்களைத் திரும்பக் கொடுத்தவுடன், அவர் ரசிகரின் கையில் இருக்கும் சாக்லேட்டை திருப்பி தருமாறு ரசிகரிடம் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ மூலம் தோனிக்கு கிரிக்கெட் மைதானத்தைப் போலவே, மைதானத்திற்கு வெளியிலும் அனைவரது மனதையும் கவர்ந்தவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும் – தவெக தலைவர் விஜய் ஆறுதல்!

சிவகங்கை  : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

4 minutes ago

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் தொடக்கம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…

20 minutes ago

2வது டெஸ்ட் போட்டி: சொற்ப ரன்னில் வெளியேறிய கேஎல் ராகுல்.., அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…

10 hours ago

அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…

11 hours ago

“ஒழுங்காக இருக்கணும். இல்லனா வேற மாதிரி ஆயிடும்” – விருதுநகர் எஸ்பி மிரட்டல் பேச்சால் சர்ச்சை.!

விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…

11 hours ago

”விசாரணை என துன்புறுத்தக் கூடாது” – காவல் துறை அதிகாரிகளுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…

11 hours ago