MSDhoni [File Image]
தனது விடுமுறையை கழிப்பதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இந்த ஆண்டிற்கான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையே நடைபெற்றது.
இந்த போட்டியை தோனி நேரில் சென்று பார்த்துள்ளார். இதன்பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இணைந்து கோல்ஃப் விளையாடினார். அதன்படி, டிரம்ப் மற்றும் தோனி இருவரும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்தது.
அந்த வகையில், தற்பொழுது தோனி தனது ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் கொடுத்து உரையாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனியை பார்த்த ரசிகர் ஒருவர் தனது கையில் இருக்கும் மினியேச்சர் பேட்களில் ஆட்டோகிராப் கேட்கிறார். உடனே தோனி அந்த பேட்டில் ஆட்டோகிராப் போட்டு அவரிடம் கொடுக்கிறார்.
தோனி கையெழுத்திட்டு பேட்களைத் திரும்பக் கொடுத்தவுடன், அவர் ரசிகரின் கையில் இருக்கும் சாக்லேட்டை திருப்பி தருமாறு ரசிகரிடம் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ மூலம் தோனிக்கு கிரிக்கெட் மைதானத்தைப் போலவே, மைதானத்திற்கு வெளியிலும் அனைவரது மனதையும் கவர்ந்தவராக இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…