Heat wave - Summer 2024 [File Image]
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது.
அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் “கத்திரி வெயில்’ நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் தான், வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு மார்ச் 2ஆவது வாரத்தில் இருந்தே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி வரும் 28ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நாட்களில் மதிய வேளைகளில் மக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால், இம்முறை அக்னி வெயில் அதிகமாக இருக்காது என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அக்னி நட்சத்திரம் காலங்களில் அதிகமாக தண்ணீர் அருந்துவதையும், தினமும் இரண்டு வேலை குளிப்பது நல்லது.
ஏற்கனவே, தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் வெயில் இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரிக்கக் கூடும் என்று நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனாவசியமாக வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…