வானிலை

உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை எச்சரிக்கை: பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு!

Published by
கெளதம்

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் பெய்து வரும் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த இரண்டு மாநிலங்களிலும்  இடைவிடாது பெய்து வரும் மழையால், மலைப்பகுதிகளில் உயிரிழப்புகள் மற்றும் பொருட்செதங்கள் ஏற்பட்டுள்ளன. சிம்லாவில் இடிந்து விழுந்த கோயிலின் இடிபாடுகளில் இருந்து மற்றொரு உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், ‘ஆரஞ்சு அலர்ட்’ விதிக்கப்பட்டுள்ளது. மேலும். இன்று (ஆகஸ்ட் 21) கனமழை பெய்யும் எனபதால் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

5 உத்தரகண்ட் மாவட்டங்கள் கனமழை எச்சரிக்கை:

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரகாண்டின் டேராடூன், பவுரி, நைனிடால், சம்பவத், பாகேஷ்வர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மற்ற மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

வயசானாலும் உங்க விளையாட்டு மாறல…பேட்டிங் பீல்டிங்கில் கலக்கிய டிவில்லியர்ஸ்!

நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: பலியான பிரிட்டன் பயணிகள் உடல்கள் மாறி வந்துள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…

3 hours ago

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து அபராத தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…

3 hours ago

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சீனர்களுக்கு சுற்றுலா விசா!

டெல்லி :  ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…

4 hours ago

இளையராஜா VS என் பெயர் பாக்கும்போது பெருமையா இருக்கு…நடிகை வனிதா வேதனை!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…

5 hours ago

INDvsENG : கருண் நாயரை தூக்கிய நிர்வாகம்! காரணம் என்ன?

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…

6 hours ago