உலக சாதனை படைக்கும் முயற்சியில் பெல்ஜியத்தை சேர்ந்த 46 வயதான ஜிம்மி-டி-பிரென்டே 116 மணிநேரம் கழிப்பறையில் அமர்ந்து சாதனை படைத்தார். இவர் 5 நாட்கள் கழிப்பறையில் உட்காரும் சவாலை ஏற்றார். திங்கள் அன்று ஏற்ற சவாலை, வெள்ளி அன்று நிறைவு செய்தார். இதனால் 116 மணி நேர சாதனை முடிந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஓய்வு எடுத்து கொண்டேன். மேலும், என்னை நானே கிண்டல் செய்வதே மிக சிறந்த நகைசுவை”. என்று […]
மெக்சிகோவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டோ டோமஸ் சவுத்லா நகரில் நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் அங்கு உள்ள ஒரு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் கனமழை காரணமாக அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் மண் மற்றும் பாறைகள் விழுந்ததில் ஒரு வீடு மண்ணோடு மண்ணாக மண்ணில் புதைந்தது.வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிர் […]
நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு மோடி பேசியதுதான் என்று அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய அமெரிக்க நட்புறவு மாநாட்டில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலொசி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவுடன் இந்தியா சென்றபோது, தொழில்துறையினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன். நான் கேட்டதிலேயே அற்புதமான பேச்சு அது தான் என்று கூறினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, கேட்பவர்களை தனது பேச்சால் கட்டிப்போடும் […]
அமெரிக்காவில் கடலோர கப்பல் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் ஒன்று போதை பொருட்களை கடத்தி கொண்டு வருவதாக அவர்களுக்கு தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க கடலோர கப்பல் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.அப்போது நீர்மூழ்கி கப்பல் கண்ணில் தென்பட்டுள்ளது.உடனே அதை பார்த்த கப்பல் படையினர் நீர்மூழ்கி கப்பலின் மீது பாய்ந்து போதை பொருளை கடத்தி சென்ற கும்பலை மடக்கி பிடித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Crazzyintheusa/status/1149764539073859586
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நீதிமன்றத்தில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் மனைவி தன்னை வாட்ஸ் அப்பில் தரக்குறைவாக திட்டியதாக வழக்கு தொடுத்துள்ளார்.அவரின் மனைவியும் அவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அவரின் முன்னாள் மனைவி அவரை கடுமையாக திட்டிவந்துள்ளார். அந்த பெண் அவரை திட்ட பயன்படுத்திய வார்த்தைகள் அவரை தூங்கவிடாமல் செய்து கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.மேலும் தொடர்ந்து […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சார்ந்த பிரெடி மேக் என்ற 57 வயது முதியவர் சில நாள்களுக்கு முன் காணாமல் போனார்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது. பிரெடி மேக் காணாமல் போனதை தொடர்ந்து பல நாட்களுக்குப் பிறகு போலீசார் மேக் வீட்டை சென்று ஆய்வு செய்த போது உயர்ந்த புற்களுக்கு மத்தியில் மனித தலைமுடி, ஆடை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட விலங்குகளின் மலத்தை […]
உலக மக்கள் தொகை தினம் வருடம்தோறும் ஜூலை 11-ம் ம் தேதி தேதி மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1987-ம் ஆண்டு உலக மக்கள் தொகை 500 கோடியாக இருந்தது. இதுவே உலக மக்கள் தினமாக மாற காரணமாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பான பிரச்சினைகளையும் , முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐக்கிய நாடுகள் சபையின் நிர்வாகப் பேரவையால் 1989-ஆம் ஆண்டு ஜூலை 11-ம் ம் […]
ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது. ஜெர்மனி அரசு வெடிக்காத வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட் நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு ஓன்று கடந்த மாதம் […]
பின்லாந்து நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு வினோதமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்லாந்தில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓட வேண்டும். கணவர்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடம் பாதையில் பல தடைகள் இருக்கும்.அவற்றை அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் மனைவியை தூக்கி கொண்டு இலக்கை அடைந்தால் மனைவியின் எடைக்கு சமமாக பீர் பரிசாக வழங்கப்படுவது வழக்கம். இந்த வினோதமான போட்டியில் சில நாள்களுக்கு முன் […]
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள் தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில் உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர். அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி வசித்து […]
அமெரிக்க கோடீஸ்வரரும் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2000 களின் முற்பகுதியில் இருந்தே குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய புதிய பாலியல் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்ஸ்டீன் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டார், திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சட்ட அமலாக்க அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தனர். அவருக்கு எதிரான ஒரு கூட்டாட்சி விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அவர் ஒருமுறை எட்டிய ஒரு மனு ஒப்பந்தம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் […]
அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 8 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து கடும் பீதியில் இருக்கின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் முதல் சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிலத்தின் அடியில் செல்லும் எரிவாயு குழாய்கள் கசிவு ஏற்பட்டு வீடுகளில் பரவியுள்ளது.வீடுகளில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செய்தி […]
குடும்ப வன்முறை என்பது கணவராலோ அல்லது குடும்ப உறுப்பினராலோ கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாகும். மேலும் கடந்த ஜூலை 2-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள செந்தனில் சுமார் 22 வயது மிக்க கர்பிணி பெண்ணை தனது கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில் இந்த ஒருவருடத்தில் குடும்ப வன்முறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 எனும் அதிர்ச்சியான தகவல் அந்நாட்டில் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் 20,000-த்திற்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறையால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் லிபியாவில் இருந்து ஐரோப்பாவை நோக்கி கடலில் படகு பயணம் மேற்கொண்டுள்ளன.அப்போது படகில் 80 பேர்க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதன் காரணமாக துனிசியா கடற்பகுதியில் ஜூலை 4-ம் தேதி இரவில் சென்றுகொண்டிருந்த போது பாரம்தாங்கமுடியாமல் படகு கவிழ்ந்துள்ளது.அப்போது 80 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 3 பேர் நீந்தி கரைசேர்ந்துள்ளனர். இதேபோல் கடந்த மே மாதம் நடந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.தற்போது 80 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான். ஸ்ட்ரோம்போலி தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி […]
எச்.ஐ .வியை குணப்படுவதற்கு தற்போது வரை மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஏ . ஆர் .டி எனப்படும் கூட்டு மருத்துவ சிகிக்சை மட்டும் அளிக்கப்படுகிறது.இந்த அறுவை சிகிக்சை எச்.ஐ .வி நோயில் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக காப்பாற்றாது ஆனால் வாழ்நாளை நீடித்து வாழ்வதற்கு உதவி செய்யும். இந்த கிருமியை அழிப்பதற்கு உலகில் உள்ள ஆராச்சியாளர்கள் கடுமையான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் எலியின் உடலில் எச்.ஐ .வி கிருமியை அழித்து நெப்ரஸ்கோ பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராச்சியாளர்கள் சாதனை படைத்தது […]
இஸ்ரோல் நாட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஓன்று இவர்களுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தை இயக்கி வருகின்றனர்.இந்த நிறுவனத்தில் தயாரிக்கும் “விஸ்கி ” மதுபாட்டிலில் மகாத்மா காந்தி புகைப்படம் பொறிக்கப்பட்டு உள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனால் பல தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இந்நிலையில் இந்த விவகாரத்தை ஆம் . ஆத்மீக எம் .பி சஞ்சய் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எழுப்பினார். இந்நிலையில் பாஜக ,காங்கிராஸ் கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் அந்த மதுபான […]
வாஷிங்டன்னில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் செயுது சுலைமான் கோகாயி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர் அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் 15 வயது மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி அதற்கு பதிலளிக்கும் படி கூறியுள்ளார். இந்த சம்பவம் காரணமாக ஆத்திரம் அடைந்த மாணவி,காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு தொடுத்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கு கடந்த ஜூலை 2-ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.அப்போது ஆஜர் செய்யப்பட்ட அவர் தனது […]
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்மணி நடாச்சா ப்ராஸ் ஆவார்.இவர் பேரீஸில் இருந்து போய்டீயர்ஸ் வரை ரயிலில் பயணமாக சென்றுள்ளார். அப்போது இவருக்கு அருகில் இருந்த இருக்கையில் ஒரு நபர் ஆபாச வீடியோவை பார்த்து கொண்டு கையை பேன்டிற்குள் விட்டபடி சுய இன்பத்தில் ஈடுபத்துள்ளார். அந்த நபர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ப்ராஸை பார்த்து கொண்டே இருந்துள்ளார்.அதை பார்த்த இவர் உடனே தனது செல்போனை எடுத்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை வீடியோ எடுத்துள்ளார். மேலும் அங்கு […]
இன்று இரவு 8.30 மணி முதல் பல்வேறு நாடுகளில் வாட்சாப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய முக்கிய இணைய தளங்கள் முடங்கிவிட்டன. அதாவது அந்த செயலிகளில் புகைப்படங்கள், ஒலி கோப்புகள், விடீயோக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. இந்த பிரச்சனை ஐரோப்பா நாடுகள், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் மட்டும் நிலவியது. மேலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வாட்சாப் செயலி மூலமாக குறுந்தகவல் கூட செயல்படவில்லை என கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரப்பூரவ தகவல் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான […]