அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சார்ந்த பிரெடி மேக் என்ற 57 வயது முதியவர் சில நாள்களுக்கு முன் காணாமல் போனார்.இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல் துறையினருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.
பிரெடி மேக் காணாமல் போனதை தொடர்ந்து பல நாட்களுக்குப் பிறகு போலீசார் மேக் வீட்டை சென்று ஆய்வு செய்த போது உயர்ந்த புற்களுக்கு மத்தியில் மனித தலைமுடி, ஆடை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட விலங்குகளின் மலத்தை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்ததில் அது பிரெடி மேக்கின் எலும்புகள் தான் என்பது தெரியவந்து உள்ளது.
unknown nodeபிரெடி மேக் ஆசையாக தனது வீட்டில் 18 நாய்கள் வளர்த்து வந்தார்.அவர் வளர்த்து வந்த அந்த 18 நாய்களும் சேர்ந்து தான் மேக்கை கடித்து தின்று உள்ளது என்பது தெரியவந்தது. நாய்களுக்கு வெறி பிடித்ததால் தான் இது போன்ற சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.