மாமியாரை அடித்த மருமகன்! மாமனார் கையால் குத்துப்பட்டு இறந்துவிட்டார்!

கோயம்புத்தூர் இடையார்பட்டி ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் பெயிண்ட்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஷாலினி என்ற பெண்ணை காதலித்து சென்றாண்டு திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்க்கு பின்னர் ராஜேந்திரன் சரிவர வேலைக்கு போகவில்லை என தெரிகிறது.
ஷாலினி கர்ப்பமாக இருந்துள்ளார். ராஜேந்திரனுக்கும் ஷாலினிக்கும் பிரச்சனை வர ஷாலினி தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து ராஜேந்திரன் ஷாலினியை அழைத்து வர அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஷாலினி அம்மாவான மீனாவிற்கும், ராஜேந்திரனுக்கும் சண்டை வர அப்போது ராஜேந்திரன் தனது மாமியார் மீனாவை தாக்கியதாக கூர்பாடுகிறது.
இதனை அறிந்து கோபமடைந்த ஷாலினியின் தந்தை தங்கமணி குமார், தனது மருமகன் ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இந்த காட்சி அருகில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியது. இந்த சம்பவத்தை அடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த ராஜேந்திரனை கோவை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும், ஷாலினிக்கு மருத்துவமனையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ராஜேந்திரனை கொலை செய்த தங்கமணி குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025