ட்விட்டர் சி.இ.ஓ வின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள்

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கானது ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.
ஹக்கர்கள் இவர்களின் வேலையே யார் குடியை கெடுக்கலாம் என்பதுதான் அங்க கைவச்சி இங்க கைவச்சி கடைசில ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கயே முடக்கிட்டாங்க.
ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கை 40 லட்சத்திற்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள் இந்நிலையில் இவரது ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹக்கர்கள் தாங்கள் தங்களுடைய “Chuckling Squad” என குழுவின் பெயரை குறிப்பிட்டுள்ளனர்.அவர்கள் ஜாக் டோர்சியின் சிம் கார்டை ஹேக் செய்து அதன் மூலம் அவரது ட்விட்டர் கணக்குக்கு சென்றுள்ளனர்.அதன் பின் அவரை பின் தொடர்வோர்க்கு தகாத வார்த்தைகள் மற்றும் இனவெறி ஏற்படுத்தும் வார்த்தைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பியுள்ளனர் .
அது மட்டுமில்லை வெடிகுண்டு ஒன்னு அலுவலகத்தில் இருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளனர் இந்த நிகழ்வு 15நிமிடங்கள் நடந்துள்ளது .அதன் பின்பு ஜாக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு சரிசெய்யப்பட்டது.இது குறித்து விசாரணை நடத்த பட்டுவருகிறது.
இந்த ஹக்கர்களுக்கு இது புதிதல்ல அவர்கள் இது போன்று பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் கைவைத்துள்ளனர் .
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025