ஆண் குழந்தை இல்லாததால் சிறுமியை கடத்தி கணவருக்கு திருமணம் செய்து வைத்த மனைவி

Default Image

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சார்ந்த அசோக்குமார் (35) சிறுமுளை கிராமத்தை சார்ந்த செல்லக்கிளிக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர்களுக்கு ஆண் குழந்தை இல்லை.இந்நிலையில் அசோக்குமார் வேலை செய்யும் மில்லில் 16 வயது சிறுமியிடம் நான் உன்னை காதலிக்கிறேன்.எங்களுக்கு ஆண் குழந்தை இல்லை என்பதால் உன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்கினேன்.
நமது திருமணத்திற்கு எனது முதல் மனைவி சம்மதம் தெரிவித்து உள்ளார் என கூறி  திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமியை அசோக்குமார் வற்புறுத்தி வந்து உள்ளார்.இதை தொடர்ந்து செல்லக்கிளி சிறுமியை கடத்தி கோவிலில் தனது கணவருக்கு திருமணம் நடத்தி வைத்து உள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கிருபா லட்சுமி அசோக்குமார் மற்றும் செல்லக்கிளி இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts