தலைமை ஆசிரியர் அடித்ததால்..! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

Default Image

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருக்கட்டாம் பட்டியை சார்ந்தவர் சுந்தரவேல் இவரது மகன் அருண்குமார்.இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில்  10-ம் வகுப்பு படித்து வந்து உள்ளார்.
தற்போது மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடைபெற்று வருகிறது.இந்த தேர்வில் அருண்குமார் காப்பியடித்தற்காக கூறப்படுகிறது.இதை தொடர்ந்து அருண்குமாரை அப்பள்ளியின்  தலைமை ஆசிரியர் சக மாணவர்கள் முன் காப்பியடித்ததற்காக அடித்து உள்ளார்.
தலைமையாசிரியர் தன்னை அடித்ததை தன் பெற்றோர்களிடம் கூறி அருண்குமார்  கதறி அழுது உள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அருண்குமார் பெற்றோர் அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.
அருண்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினார். ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts