முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதி- பிரகாஷ் ஜவடேகர்

- மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- இந்த கூட்டத்தில் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தலைமை தளபதியாக நியமிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பிக்கும் பணிக்காக ரூ.8,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக யாரும் அச்சப்பட தேவையில்லை .மக்கள்தொகை பதிவேட்டின் மூலம் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த திட்டமில்லை .மக்கள் தொகை பதிவேட்டின் தகவலைக்கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படாது. திட்டம் தொடர்பாக தற்போதைக்கு எந்த பரிந்துரையும் வரவில்லை என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025