வன்முறை எதிரொலி : தேர்வுகள் ஒத்திவைப்பு !

டெல்லியில் வன்முறை காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டு கலவர களமாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் அப்பகுதியில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் வன்முறையில் வீடுகள் மற்றும் பொது சொத்துக்கள் போன்றவை சேதமடைந்தன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் டெல்லி வன்முறை எதிரொலியாக இன்று ( பிப்ரவரி 28-ஆம் தேதி ) மற்றும் நாளை நடக்க இருந்த 10 மற்றும் 12 வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025