எந்தெந்த தொழிற்சாலைகள், எவ்வாறு இயங்கலாம்? தமிழக அரசின் தளர்வுகள்

மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில், மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. எனவே இன்று முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஊரடங்கு தளர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது.
அதன்படி,50 சதவிகித பணியாளர்களை கொண்டு (குறைந்தபட்சம் 20 நபர்கள்) மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் செயல்பட அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025