இந்தியாவில் 40 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ஊரடங்கு உத்தரவு மே 17-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.நாடு முழுவதும் 39,980 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,301 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே 10633 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 12296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 521 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,2000 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025