கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை !

கோவை மற்றும் திருப்பூரில் தொடர்ந்து 9 நாளாக புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று மட்டும் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று 510 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 4,882ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த 9 நாட்களாக கோவை மற்றும் திருப்பூரில் புதிதாக எந்தொரு பாதிப்பும் ஏற்படவில்லை.
திருப்பூரில் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்துள்ளதால் தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து கோவையில் மொத்த 146 பேரில் இன்னும் 4 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர், மீதமுள்ள 144 பேரும் குணமடைந்துள்ளனர். கோவையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025