அமெரிக்காவில் 83 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை!

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்துள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள நிலையில், இதனை முற்றிலுமாக அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால் இதுவரை, உலக அளவில் 4,342,849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 292,899 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்கத்தால், அதிகமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும், பலியானவர்களின் எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான்.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரை, 1,408,636 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 83,425 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் நேற்று மட்டும் இந்த கொரோனா வைரஸால், 1,630 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025