கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

Default Image

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. 

இதனிடையே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த மாநிலத்துக்கு நடந்து செல்ல தொடங்கினார்கள். இப்படி சென்ற தொழிலாளர்களில் பலர் விபத்துகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவங்களும் நடந்து உள்ளன. இதைத்தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது என்பதில் தெளிவு தேவை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் கிளம்பும் மாநிலமோ அல்லது சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன. உணவு மற்றும் குடிநீரும் ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது என்று கூறியது.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் தொழிலாளர்களுக்கு ரயில்வேத்துறை உணவு, குடிநீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts