கேரளாவில் இன்று 61 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

Default Image

இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,260 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 4 உட்பட 61 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் தற்போது 670 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து இன்று 15 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், இதுவரை 590 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் கொரோனாவால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,260 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்