நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு!

திண்பண்டம் என்று நினைத்து, நாட்டுவெடியை கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே, தொட்டியம் பகுதியை சேர்ந்த தமிழரசன் உள்ளிட்ட 3 பேர் அங்குள்ள காவிரி ஆற்றில் நாட்டு வெடிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்துள்ளனர். மீன்களை பிடித்துக்கொண்டு தனது சகோதரர் பூபதி வீட்டிற்கு கொண்டு சென்ற தமிழரசன், மீதமுள்ள நாட்டு வெடி ஒன்றை அங்கு வைத்து சென்றுள்ளார்.
அந்த வேளையில், அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணுதேவ், மீதமுள்ள ஜெலட்டின் குச்சியை, திண்பண்டம் என நினைத்து சாப்பிட முயன்ற போது, அது வெடித்தது. இதனையடுத்து, விஷ்ணுதேவ் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறைக்கு பயந்த அவரது பெற்றோர், அருகில் உள்ள சுடுகாட்டில் குழந்தையின் சடலத்தை எரித்துள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான புகாரின் பெயரில், காவல்துறையினர் கங்காதரன், மோகன்ராஜ், தமிழரசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025