ரவுடி கொலை வழக்கு- குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..?

சென்னை அண்ணாநகர் வில்லிவாகத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஷாஜகான், இவருடைய நெருங்கிய நண்பர் பிரபு இவர் கடந்த மாதம் 4ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சண்முகம் என்பவர் அந்த பகுதிக்கு வந்தார் சண்முகத்துடன் அவருடைய கூட்டாளி அஜித் மற்றும் திவாகர் என்பவரும் வந்தனர்.
வந்தவுடன் ஒன்றும் கூறாமல் சண்முகம் மற்றும் திவாகர் அஜித் பிரபுவை தாக்கியுள்ளனர், மேலும் இதுகுறித்து பிரபு தனது நண்பர் ஷாஜகானிடம் நடந்ததைக் கூறினார் உடனே ஷாஜகான் சண்முகத்தை பார்க்க சென்றுள்ளார், சண்முகத்தை பார்தததும் ஷாஜகான் மிரட்டியுள்ளார் இந்த நிலையில் இதனால் கோபமடைந்த சண்முகம் ரவுடி ஷாஜகானை நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார் .
இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிகரன், திவாகர், மற்றும் ஆகாஷ், ரமேஷ், சதிஷ்குமார், மணி, பஷிர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர் மேலும் கொலை செய்த முக்கிய குற்றவாளியான சண்முகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025