ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேற்கு வங்க நபர்!

Default Image

மேற்குவங்கத்தில் உள்ள நபர் ஒருவருக்கு ஒரே மாதத்தில் இரு முறை கொரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரானா வைரஸ்ஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில், ஏற்கனவே ஒரு முறை உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியான அறிக்கையில், கொரோனா  வைரஸ் தன்னைப்பற்றி அறியமுடியாத பல கருத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது, அதாவது ஒரு நிலையில் இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே உள்ளதால் இன்னும் முழுவதுமாக அதனை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை என கூறியிருந்தனர். மேலும் குரானா வைரஸ் தொற்று ஒருமுறை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவரது ஆன்டிபாடிகள் மூலம் அடுத்த முறை ஏற்படாது என்பது முழுமையாக நம்ப முடியாது  எனவும்  கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்பொழுது மேற்கு வங்கம் ஜல்பைகுரியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியராக பணிபுரியும் 45 வயது கொண்ட ஒருவருக்கு கடந்த மாதம் இரண்டாவது வாரத்தில் கொரானா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டு மருத்துவமனை சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குணமடைந்து வீடு திரும்பிய இவர் மீண்டும் பணியையும் தொடங்கி விட்டார். இந்நிலையில், அவருக்கு அடுத்த இரண்டு வாரத்தில் கொரோனா அறிகுறிகள் உருவாகத் தொடங்கியுள்ளது, பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரானா வைரஸ் மீண்டும் உடலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies